முந்தும் திமுக! வெற்றியை கொண்டாட துவங்கிய தொண்டர்கள்... 62 தொகுதிகள் நிலைமை மாறக்கூடும் என வெளியான பரபரப்பு தகவல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திமுக முந்தும் நிலையில் 62 தொகுதிகளில் நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி திமுக 142 தொகுதிகளிலும், அதிமுக 91 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இவற்றில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், திமுக மட்டும் 116 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகித்து வருகின்றன. ஆட்சியமைக்குத் தேவையான 118 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
என்னதான் முன்னிலையில் இருந்தாலும் அதிமுக கூட்டணி திமுகவை விரட்டிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
தற்போது மதியம் 12.30 மணி நிலவரப்படி முதல் இரண்டு இடங்களை வகிக்கும் திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகள் 62 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் முன்னிலை வகித்துவருகின்றன.
இப்போதைய நிலையில் சில தொகுதிகளில் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசம் இருப்பதால், இந்தத் தொகுதிகளின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் என்றே நிலையே உள்ளது.
இதனால் முழுமையான முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.
இதனிடையில் திமுக வெற்றி உறுதி மற்றும் முக ஸ்டாலின் தான் அடுத்த தமிழக முதல்வர் என திமுக தொண்டர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.