நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! பதறவைக்கும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி! எச்சரிக்கை செய்தி
ஹைதராபாத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் முக்கிய சாலை ஒன்றில் 2 நாட்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாக பரவிவந்தது. இதனை அடுத்து இந்த வீடியோ நாடு முழுவதும் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுவரை மொபைல் போன்கள் அல்லது பிற எலக்ட்ரானிக் சாதனங்கள் தீப்பிடித்து எரியம் செய்திகள் பல வெளிவந்துள்ளன.
ஆனால் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிந்துள்ள சம்பவம் வாகன தொழித்துறையினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பதற்கு முன்பு புகையை கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1.51 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோ கிளிப்பை @in_patrao என்ற பயனர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
Buy a E Scooter and suffer pic.twitter.com/OGX6CxMmMb
— Patrao (@in_patrao) September 29, 2021
அதில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து பெரும் வெண்புகை சிறிது சிறிதாக வெளியேற துவங்கி, போக போக புகை வெளியேறும் அளவு அதிகமாகிறது. ஸ்கூட்டரின் சீட் பகுதி ஓபன் செய்து வைக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் வெண்புகைக்கு மத்தியில் அவ்வப்போது தீ தோன்றியது. ஒரு கட்டத்தில் புகை மறைந்து முற்றிலும் தீ மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து வெளியே வருகிறது. இதனை பார்த்து அருகிலிருந்த மக்கள் வாகனத்தை விட்டு தள்ளி ஓடுகின்றனர்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் சில நிபுணர்கள் கூறுகையில் வாகனத்தின் பேட்டரியில் பழுது ஏற்பட்டிருந்தால் கூட இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
தற்போது பெரும்பாலான மக்கள் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற திட்டமிட்டுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் பற்றிய பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.