வழக்கொன்றிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மின்னணுப்பட்டை அகற்றம்
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸியின் காலில் அணிவிக்கப்பட்டிருந்த மின்னணுப்பட்டை அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மின்னணுப்பட்டை அகற்றம்
2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி (70), ஒரு ஆண்டுக்கு தனது காலில் குற்றவாளிகள் அணியும் மின்னணுப்பட்டை அணியவேண்டும் என பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அவரது வயது காரணமாக அவர் முன்கூட்டியே ஜாமீன் பெறலாம் என்பதால், வெறும் மூன்று மாதங்களே மின்னணுப்பட்டை அணிந்திருந்த நிலையில், நேற்று, அதாவது, மே மாதம் 14ஆம் திகதி, சார்க்கோஸியின் மின்னணுப்பட்டை அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் சர்வாதிகாரியான முகம்மது கடாபியிடம் சார்க்கோஸி சட்டவிரோதமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு வழக்கில், வரும் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |