யூரோ கால்பந்து: ஜேர்மனியை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி! கணித்து கூறிய யானை
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என யசோதா என்ற யானை கணித்துக் கூறியுள்ளது.
விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது எந்த அணி வெற்றி பெறும் என விலங்குகளை வைத்து கணிப்பது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் யூரோ கால்பந்து போட்டியில் ஜேர்மன்- பிரான்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என யசோதா யானையை வைத்து கணிக்கப்பட்டது.
வெள்ளிப் பெட்டி ஒன்றில் ஜேர்மனி, பிரான்ஸ் நாட்டு கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பிரான்சின் கொடியை யானை எடுத்ததால் அந்த அணியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
தங்கள் அணி முதல் போட்டியிலேயே தோற்கும் என்ற யானையின் ஆருடத்தால் ஜேர்மனி நாட்டு கால்பந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.