சொந்த நகரத்தை உருவாக்கும் எலோன் மஸ்க்: வாக்கெடுப்பில் வெற்றி
செவ்வாய் கிரகத்தில் காலனித்துவப்படுத்துவதற்கான தனது லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக, டெக்சாஸில் தனது சொந்த நகரத்தை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பில் எலோன் மஸ்க் வெற்றி பெற்றுள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில்
Starbase என பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் டெக்சாஸ் மாகாணத்தில் அமைய உள்ளது. அங்குள்ள மொத்த குடியிருப்பாளர்களில் 173 பேர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், 3 பேர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் பெரும்பாலான வாக்காளர்கள் மஸ்கின் SpaceX நிறுவன ஊழியர்கள் என்றே கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கலிபோர்னியாவில் இருந்து தமது தலைமை அலுவலகத்தை டெக்சாஸ் மாகாணத்திற்கு மாற்றியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சொந்த நகரம் ஒன்றை உருவாக்க மக்கள் ஆதரவளித்துள்ளதை எலோன் மஸ்க் தமது எக்ஸ் பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்திருந்தார். Starbase நகரின் முதல் மேயராக Bobby Peden என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நகர ஆணையர்களாக ஜென்னா பெட்ர்செல்கா மற்றும் ஜோர்டான் பஸ் ஆகிய இருவர் தெரிவாகியுள்ளனர். இவர்கள் மூவரும் SpaceX முன்னாள் ஊழியர்கள் என்றே கூறப்படுகிறது. ஸ்டார்பேஸ் நகரம் என்பது பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் திட்டத்திற்கான வசதி மற்றும் ஏவுதளமாக செயல்படும்.
மஸ்க் முதன்முதலில் 2021 இல் ஸ்டார்பேஸ் நகரம் பற்றிய யோசனையை முன்வைத்தார், மேலும் புதிய நகரத்திற்கான ஒப்புதல் கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது. இந்தப் பகுதியில் உள்ள 283 தகுதியுள்ள வாக்காளர்களில் பெரும்பாலோர் ஸ்டார்பேஸ் ஊழியர்களாவார்.
ஜனாதிபதி ட்ரம்புடன் செயல்படத் தொடங்கியதில் இருந்து மஸ்கின் செல்வாக்கு கடும் சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது ஸ்டார்பேஸ் நகரம் தொடர்பான வெற்றி அவருக்கு தனிப்பட்ட முறையில் ஊக்கமளிக்கும் நகர்வு என்றே கூறப்படுகிறது.
அப்பகுதி மக்கள் அதிருப்தி
மேலும் ஏற்கனவே சாலைகள் உள்ளிட்ட வசதிகளை SpaceX நிறுவனம் நிர்வகிக்கிறது, அத்துடன் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கான பாடசாலை மற்றும் மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளையும் நிர்வகிக்கிறது.
இதனிடையே, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் இயந்திர சோதனைகள், மற்றும் ஏவுதளத்தைச் சுற்றி சில உபகரணங்களை நகர்த்துவதற்கு கூட உள்ளூர் நெடுஞ்சாலை, போகா சிகா மாகாண பூங்கா மற்றும் போகா சிகா கடற்கரையை மூட வேண்டிய நிலை உள்ளது.
இந்த நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. மக்கள் பயன்படுத்தும் கடற்கரையை மூடுவது முறையல்ல என்ற சலசலப்பும் எழுந்துள்ளது.
இதனிடையே, நகர வாக்கெடுப்பு மற்றும் கடற்கரை அணுகல் பிரச்சினைக்கு எதிராக போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ள தெற்கு டெக்சாஸ் சுற்றுச்சூழல் நீதி அமைப்பு, சனிக்கிழமை மற்றொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, இது டசின் கணக்கான மக்களை ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |