எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்த எலான் மஸ்க் - எத்தனை லட்சம் கோடி தெரியுமா?
X நிறுவனத்தை xAI நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், Tesla, Space X, Nueralink உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார்.
அதன் பின்னர் டிவிட்டரை எக்ஸ்(X) என பெயர் மாற்றியதுடன், பல்வேறு உயர்மட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன், எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தார்.
கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் ப்ளூடிக் பெரும் முறை, GROK என்னும் Chatbot ஆகியவற்றை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார்.
எக்ஸ் தளம் விற்பனை
தற்போது எக்ஸ் தளத்தை தன்னுடைய மற்றொரு நிறுவனமான xAI க்கு 33 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ2.82 லட்சம் கோடி) விற்பதாக அறிவித்துள்ளார்.
@xAI has acquired @X in an all-stock transaction. The combination values xAI at $80 billion and X at $33 billion ($45B less $12B debt).
— Elon Musk (@elonmusk) March 28, 2025
Since its founding two years ago, xAI has rapidly become one of the leading AI labs in the world, building models and data centers at…
xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை, கடந்த 2023 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கினார். எக்ஸ் தளத்தில் உள்ள GROK AI உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது xAI தான்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட xAI நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் xAI வெளியிட்ட Grok 3, ChatGPT, DeepSeek போன்ற Chatbotகளுக்கு கடும் போட்டியை அளிக்கும் என எலான் மஸ்க் நம்புகிறார்.
இந்த நிறுவன மாற்றத்திற்கு பின்னர், இரு நிறுவனங்களின், தரவு, மாதிரிகள், கணினி, விநியோகம் ஊழியர்களும் இணைக்கப்பட்டு இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |