இது சரியில்லை! உச்சகட்ட பதற்றத்தில் அமெரிக்க நகரம் - மஸ்க் பகிர்ந்த புகைப்படம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நீடித்து வரும் போராட்டத்தை குறிப்பிட்டு எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
பதற்றத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்
குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க, லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய இராணுவத்தை நிறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் நீடிப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels) பதற்றத்தில் உள்ளது.
அதே சமயம், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து தேசிய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என ட்ரம்பை கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூஸம் வலியுறுத்தினார்.
இது சரியில்லை
இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் தனது கையில் கொடியை ஏந்தி, கார் ஒன்றின் மீது ஏறி நிற்கும் புகைப்படத்தை எலோன் மஸ்க் பதிவிட்டு, "இது சரியில்லை" என குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த நபர் ஒருவர், "அது என்னுடைய புகைப்படம்தான்! பகிர்ந்ததற்கு மிக்க நன்றி எலோன் மஸ்க்!" என பதிவிட்டுள்ளார்.
This is not ok pic.twitter.com/feOtg6f6ge
— Elon Musk (@elonmusk) June 9, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |