H-1B விசாவில் மோசடி: இந்தியர்களால் அமெரிக்கா..எலோன் மஸ்க் ஆதரவு
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் H-1B விசா திட்டம் குறித்து எலோன் மஸ்க் பேசியுள்ளார்.
H-1B விசா
உலகின் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க் (Elon Musk), 'People by WTF' என்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேசினார். 
இந்த பாட்காஸ்டினை ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தினார். அப்போது H-1B விசா குறித்த பேச்சும் அடிபட்டது.
அப்போது எலோன் மஸ்க், "திறமையான இந்தியர்களால் அமெரிக்கா நிறைய பலனடைந்திருக்கிறது. தற்போதைய H-1B விசா கெடுபிடி நடைமுறைக்கு, அதில் செய்யப்பட்ட மோசடிகளே காரணம். முந்தைய அரசாங்கம் எந்தவொரு கெடுபிடியும் இல்லாமல், H-1B விசாவை மிகவும் எளிதாகக் கொடுத்தது. அதுவும் ஒரு காரணம்.
அமெரிக்காவிற்கு வரும் பிற நாட்டினரால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது என்று கூறுவது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. 
நான் நேரடியாகப் பார்த்தவரையில் இங்கே எப்போதும் திறனுள்ள மக்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்து முடிக்கும் திறமையான ஆட்களை இங்கே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது.
அதனால், இன்னும் திறமையான மக்கள் இங்கே இருந்தால் நல்லது. என்னுடைய நிறுவனம் எப்போதும் திறமையான மக்களை பணியமர்த்துவதில்தான் கவனமாக இருக்கும்.
ஆனால், சில நிறுவனங்கள் H-1B விசாவில் மோசடி செய்கின்றனர்.
ஆனால், அதற்காக H-1B விசா திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த மோசடியைதான் சரிசெய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |