லண்டன் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கம்: நடந்தது என்ன?
போலந்து நாட்டிலிருந்து லண்டன் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானம்
ஒன்று, ஜேர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடந்தது என்ன?
ஞாயிற்றுக்கிழமை இரவு, போலந்திலுள்ள Posnan நகரிலிருந்து லண்டன் Luton விமான நிலையம் நோக்கி விமானம் ஒன்று 199 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது.
அப்போது, போலந்து நாட்டிலுள்ள விமான கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து ஒரு செய்தி கிடைத்துள்ளது.
வெடிகுண்டு அச்சுறுத்தல்
விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருக்கலாம் என போலந்து நாட்டிலுள்ள விமான கட்டுப்பாட்டு நிலையம் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, ஜேர்மனியிலுள்ள Paderborn விமான நிலையத்தில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டது. அந்த விமான நிலையம், ஜேர்மனியிலுள்ள சிறிய விமான நிலையங்களில் ஒன்றாகும்.
ஆகவே, அந்த நேரத்தில் Paderborn விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த விமானத்தை Düsseldorf விமான நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு, அந்த இடத்தில் இந்த விமானம் இறக்கப்பட்டுள்ளது.
உடனடியாக, மோப்ப நாய்களுடன் அங்கு விரைந்த சிறப்பு பொலிஸ் படையினர் விமானத்தை சோதனையிட்டனர். பின்னர், விமானத்தில் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
பயணிகள் அனைவரும் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டு, பின்னர் திங்கட்கிழமை காலை தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.