ரஷ்யா தாக்கினால் அமெரிக்கா கண்டுகொள்ளாது... நேட்டோ நாடுகளுக்கு டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகளை ரஷ்யா தாக்கினால், கண்டுகொள்ளாமல் தாக்குதலை ஊக்குவிக்க முயற்சிப்பேன் என்று டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடமைகளை பூர்த்தி செய்யாத
தங்கள் பொருளாதார கடமைகளை பூர்த்தி செய்யாத நாடுகளுக்கு இது பொருந்தும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் இந்த கருத்தானது திகைப்பை ஏற்படுத்துவதாக வெள்ளைமாளிகை பதிலளித்துள்ளது.
@epa
தென் கரோலினாவில் உள்ள கான்வேயில் சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் இந்த கருத்தை தெரிவித்திருந்தார். ஏற்கனவே உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை அள்ளித்தருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், தனது எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தார்.
நேட்டோ அமைப்பானது உள்ளவரையில், அந்த 31 உறுப்பு நாடுகளையும் பாதுகாப்பு பொறுப்பு அமெரிக்காவுக்கு உள்ளது. ஆனால், கடமை தவறிய எந்த நாட்டையும் தமது தலைமையிலான அரசாங்கம் பாதுகாக்காது என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
@getty
2 சதவிகிதம் பாதுகாப்புக்காக
நேட்டோ உறுப்பு நடுகளுடனான கூட்டம் ஒன்றிலேயே இந்த விவாதம் நடந்ததாகவும், அப்போது தாம் வெளிப்படையாக மறுப்பு தெரிவித்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கிரிமியன் தீபகற்பமானது 2014ல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் 2024 க்குள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் பாதுகாப்புக்காக செலவழிக்கப்படும் என்று நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டன.
@getty
2016 தேர்தல் பரப்புரையின் போதும் 2 சதவிகிதம் செலவிடாத நாடுகளை தேவையான நேரத்தில் கைவிடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால் 2022ல் மொத்தமுள்ள 31 நாடுகளில் 7 மட்டுமே இலக்கை எட்டியதாக கூறப்படுகிறது.
தற்போது ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த கருத்தானது, உக்ரைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |