தோழி மீது காதல் மலர்ந்தது எப்படி? ஒரேபாலின திருமணம்- டிரெண்டிங் ஜோடியின் அழகான கதை
இந்தியாவில் சமீபத்தில் தன்னுடைய தோழியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பெண்ணின் புகைப்படங்கள் வைரலானது.
அவர்கள் இருவருமே மருத்துவர்கள் Surbhi Mitra மற்றும் Paromita Mukherjee, மகாராஷ்டிராவின் நாக்பூரில் நிச்சயம் செய்து கொண்டனர்.
இந்த புகைப்படங்கள் வைரலாக அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன, இந்நிலையில் தங்களுக்குள் காதல மலர்ந்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் Paromita.
சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடந்த கான்ஃப்ரன்ஷில் Surbhiயை பார்த்தேன், நான் கலந்து கொண்ட நிகழ்வில் அவள் பேச்சாளராக இருந்தாள்.
நான் அவளிடம் பேசச்சென்ற போது அவசர வேலையாக கிளம்பிவிட்டாள், எங்களது இன்ஸ்டாகிராம் ஐடிக்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.
நாங்கள் அடிக்கடி பேசியதால் நண்பர்களானோம், பார்த்தவுடனே எனக்கு காதல் வரவில்லை, ஆனால் ஏதோவொரு உணர்வு இருந்தது.
“எங்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டதை அவளிடம் கூறினேன், ஒருவேளை நான் அங்கு உன்னிடம் என் காதலை தெரிவித்தால், என்னை ஏற்றுக்கொள்வாயா?“ என கேட்டேன்.
” இல்லை நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்?” என கேட்டாள், உடனே அவளை கோவா அழைத்து சென்று என் காதலை கூறினேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2013ம் ஆண்டே தன்னிடம் உள்ள மாற்றத்தை தந்தையிடம் கூறிவிட்டதாகவும், தற்போது தாயிடம் கூறிய போது அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகிழ்ச்சி கருதி குடும்பத்தில் அனைவரும் சம்மதித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் கோவாவில் இரு குடும்பங்கள் ஒன்றிணைய திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம் Surbhi Mitra மற்றும் Paromita Mukherjee.