அடுத்த மாதம் திருமணம்; கரூர் நெரிசலில் உயிரிழந்த புதுப்பெண், மாப்பிள்ளை
தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அடுத்த திருமணம் செய்துகொள்ளவிருந்த புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் திருமணம்
கரூரைச் சேர்ந்த கோகுலஸ்ரீ என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த ஜோடி கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து கோகுலஸ்ரீயின் தாயார் ஊடகத்திடம் பேசும்போது, "சாவதற்காகத்தான் இப்படிப் போனார்களா? கட்சி கட்சின்னு ஏன் எல்லாரையும் உயிரை விட வெக்கறீங்க? கட்சி கட்சின்னு எத்தனை பேரோட குடும்பம் வீதியில நிக்குது?
அடுத்த மாதம் கல்யாணம். ரெண்டு பேருக்குமே 24 வயசுதான் ஆகுது. ரெண்டு பேரும் ரெண்டு மணிவரைக்கும் பேசிட்டுதான் போனாங்க. கரூர்ங்கறனால போனாங்க. மாடிலதான் நிக்கறேன்னு சொன்னாங்க. நானும் கூடத்தான் இருந்தேன்.
இறங்கி வரையிலதான் என் புள்ளைய கொன்னுட்டாங்க. ஆறரை மணிக்கு போன்ல பேசுனோம். கும்பலா இருக்கு வந்துருங்கனு சொன்னோம். செல்பி எடுத்துட்டு வந்துடறேன்னு சொன்னாங்க.
செய்திய பாத்துட்டுதான் நாங்க வந்தோம்.
என் பையன் தப்பிச்சுக்கிட்டான். புள்ளையும், மாப்பிள்ளையும் போயிட்டாங்க. என் புள்ளைய ஆசை ஆசையா வளர்த்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |