வெளிநாட்டில் இருந்து திருமணம் செய்து கொள்ள சொந்த ஊர் வந்த இளைஞன்! அடுத்தநாளே குடும்பத்தார் கண்ட அதிர்ச்சி காட்சி
வெளிநாட்டில் இருந்து திருமணம் செய்து கொள்ள சொந்த ஊருக்கு வந்த இளைஞர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
கன்னியாக்குமரியின் மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின் (31). என்ஜினீயரான இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
கிறிஸ்டோ செபாஸ்டினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
இதையடுத்து திருமணத்துக்காக கடந்த 23ம் திகதி கிறிஸ்டோ செபாஸ்டின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினர் அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்றிருந்தனர். வீட்டில் கிறிஸ்டோ செபாஸ்டின் மட்டும் தனியாக இருந்தார்.
சிறிது நேரத்தில் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினர். அப்போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் பின்பக்க வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, கிறிஸ்டோ செபாஸ்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிறிஸ்டோ செபாஸ்டினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் கிறிஸ்டோ தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.