காவல் நிலையத்திற்கே சென்று துணை ஆய்வாளரை கத்தியால் குத்திய இளைஞர்! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி
நோ பார்க்கிங்கில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த தனது பைக்கை எடுத்துச் சென்றதற்காக இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்கே சென்று போக்குவரத்து காவல் துணை ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் இந்திய மாநிலம் மத்திய பிரதசத்தில், எம்.பி. நகர் காவல் நிலையத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்தின் முன் நடந்துள்ளது.
நேற்று (சனிக்கிழமையன்று) மாலை, ஜோதி டாக்கீஸ் அருகே சாலையோரம் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து பொலிஸார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அவற்றில், ஹர்ஷ் மீனா எனும் 27 வயது பொறியாளரின் இருசக்கர வாகனமும் எடுத்து செல்லப்பட்டது. ஜோதி காம்ப்லெஸ் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்த ஹர்ஷ் மீனா, தனது வக்கனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது தெரியவந்ததும் நேராக எம்.பி. நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தியதற்காக ரூ. 600 அபராதம் கொடுத்துவிட்டு மற்றும் வாகனத்தின் ஆவணங்களை காண்பித்துவிட்டு பைக்கை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் கூறியுள்ளார்.
வெறுங்கையுடன் வந்த மீனா, அங்கிருந்து வீட்டிற்கு சென்று அப்பணத்தையும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் துபேய் என்பவரை சந்தித்து, அபராதத்தை கட்டினார். பிறகு அங்கிருந்து வேகவேகமாக தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றார்.
அப்போது, மீனா துன்பை ஆய்வாளரை திரும்பி திரும்பி பார்த்துள்ளார். அவர் வித்தியாசமாக நடந்துகொள்வதை பார்த்த சக பொலிஸார், துணை ஆய்வாளர் துபேய் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஹர்ஷ் மீனா அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போதும், அங்கிருந்தவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஹர்ஷ் மீனா காவல் நிலையத்தில் 'சைக்கோ' போல நடந்து கொள்ளத் தொடங்கினார் மற்றும் சில நிமிடங்களில் சிரித்துவிட்டு பின் அழுதார் என கூறினர்.
எஸ்.ஐ. துபே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஏஎஸ்பி ராஜேஷ் பதூரியா கூறினார்.
பொறியாளர் ஹர்ஷ் மீனா மீது கொலை முயற்சி குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.