ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த 9 வீரர்கள்: பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து அணி
England lead by 261 runs in lord's test: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இங்கிலாந்து அணி 81 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டுள்ளது.
இங்கிலாந்து 290 ஓட்டங்கள்
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் 1 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷாஃபிக் (5), பாபர் அஸாம் (8) ஆகியோரை டங் வெளியேற்ற, சவுத் ஷகீல் 16 ஓட்டங்களில் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் lbw ஆனார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மழை குறுக்கிட
அதிகபட்சமாக அஸான் அவைஸ் (Azan Awais) 7 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்தார். ஓலி ராபின்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுக்க மழை குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
கே 30 ஓட்டங்களுடனும், ஹாரி ப்ரூக் 7 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்க இங்கிலாந்து 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |