இங்கிலாந்து - டென்மார்க் யூரோ 2024 போட்டி: பப்பில் வெடித்த மோதல்: 1 பலி
இங்கிலாந்து - டென்மார்க் யூரோ 2024 போட்டிக்கு பிறகு பப்பில் நடைபெற்ற தாக்குதலில் 57 வயதான நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர தாக்குதல்
இங்கிலாந்து - டென்மார்க் யூரோ 2024 போட்டி 1-1 என்ற சமநிலையில் முடிந்த பின்னர், மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு பப்பில் நடந்த கொடூரமான தாக்குதலில் 57 வயதான நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட 57 வயதான நபர் தெற்கு யார்கூயர் பகுதியை சேர்ந்தவர் என்றும், போட்டி முடிந்து மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
சிசெஸ்டரில் உள்ள "தி டால்பின் அண்ட் ஆங்கர் வெதர்ஸ்பூன்" பப்பில் மூன்று பேர் கொண்ட கும்பலால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை வழக்குப்பதிவு
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால சேவைகள் மற்றும் மருத்துவ குழுவினர் தாக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்தும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிர்மிங்கஹத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்,
அதே நேரத்தில் கவுண்டி டர்ஹாமிலிருந்து(Durham) 42 வயதான ஒருவர் கலவரம் (affray) செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது நபர் கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் தற்போது அவர் காவல்துறையின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |