யூரோ கால்பந்து! தோல்வியால் மைதானத்தில் கண்கலங்கிய இங்கிலாந்து வீரர்கள்: முகம் வாடிய இளவரசர் வில்லியம்-கேட்மிடில்டன் புகைப்படம்
யூரோ கால்பந்து தொடரின் இத்தாலி அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததால், அந்தணி வீரர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கினர்.
லண்டனின் விம்ப்ளி மைதானத்தில், இன்று யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் கொடுக்கப்பட்ட முதல் பகுதியில் இரு அணிகளுமே 1-1 என்று சமநிலை வகிக்க, அதன் பின் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டு, அதில் இரு அணிகளுமே கோல் அடிக்காத காரணத்தினால், பெனால்ட்டி ஷுட் கொடுக்கப்பட்டது.
இந்த பெனால்ட்டி ஷுட்டில் கொடுக்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில் இத்தாலி 3-2 என்று முன்னிலை வகித்து, இரண்டாவது முறையாக, யூரோ சாம்பியன் ஆனது. 53 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சாம்பியன் ஆகியுள்ள, இத்தாலி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன், அந்நாட்டு ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், ஒரு புறம் இந்த வெற்றிக்காக 55 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே காத்திருந்தது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் சிலர் மைதானத்தில் அப்படியே கண்கலங்கிவிட்டனர்.
அப்போது இங்கிலாந்து அணியின் மேலாளர் வந்து அவர்களை தேற்றும் புகைப்படமும், மிகவும் ஆவலுடன் வந்து இப்போட்டியை கண்டுகளித்த இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் மற்றும் குட்டி இளவரசர் ஜார்ஜ் இந்த தோல்வியா சற்று முகம் வாடி காணப்பட்டனர்.