உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும்? பிரித்தானிய நிபுணர் சொன்ன தகவல்
உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து இங்கிலாந்து நிபுணர் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகின்றது. கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் கடந்தாலும் இன்றுவரை அதனின் வீரியம் குறைந்தபாடில்லை.
இருப்பினும் வைரஸ் சற்று ஓய்ந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயர் சூட்டியது. இதையடுத்து தற்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான Paul Hunter கொரோனா பரவல் குறித்து ஆறுதல் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
Omicron அலை தணிந்த பிறகு Covid 19 பெருந்தொற்று என்ற நிலை மாறி தீவிரம் குறைந்து தொற்று கிட்ட தட்ட முடிவுக்கு வந்து விடும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொண்டால் COVID தெறித்து ஓடிவிடும் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் Omicron தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து நோய்த்தொற்று விகிதம் நான்கு மடங்கு அதிகமாக இருந்தாலும் தினசரி இறப்புகள் அளவு மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.