யூரோ கிண்ணம் ஊக்க ஊதியம்: இங்கிலாந்து அணி எடுத்த நெகிழ்ச்சி முடிவு
யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால், அதனால் கிடைக்கும் மொத்த ஊக்க ஊதியத்தையும் நன்கொடையாக வழங்க இங்கிலாந்து அணி வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
யூரோ கிண்ணம் கால்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் களமிறங்கவிருக்கும் இத்தாலி 1968கு பிறகு கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
இந்த நிலையில், யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றால் அதனால் கிடைக்கும் மொத்த ஊக்க ஊதியமான 9.5 மில்லியன் பவுண்டுகள் தொகையை NHS அமைப்புக்கு நன்கொடையாக அளிக்க இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது.
1966கு பிறகு இங்கிலாந்து அணி முதன்முறையாக யூரோ கிண்ணம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஞாயிறு போட்டியில் வென்றால் இங்கிலாந்து கால்பந்து நிர்வாகத்திற்கு வெகுமதியாக 24 மில்லியன் பவுண்டுகள் கிடைக்க வாய்ப்பு.
அதில் சுமார் 40% தொகை அணியின் 26 வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த தொகை தான் வீரர்கள் அனைவரும் நன்கொடையாக அளிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.