ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்த காவல் துறை அதிகாரிகள்! இனவெறி காரணமா.?
அமெரிக்க நகரமொன்றில் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் ஒரே நாளில் ராஜினாமா செய்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இனவெறியே முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கென்லி (Kenly) நகரத்தில் வெள்ளிக்கிழமை முழு காவல்துறையும் ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு சட்டத்தை அமுல்படுத்த யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கென்லி நகரத்திற்கு புதிய நிர்வாக மேலாளர் (town manager) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் இந்த திடுக்கிடும் வெகுஜன வெளியேற்றத்தில் ஈடுபட்டனர். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, மற்ற அதிகாரிகளும் இதில் இணைந்தனர்.
Image: Facebook/Josh Gibson
ராஜினாமா கடிதங்களில் "மன அழுத்தம் மற்றும் விரோதமான பணிச்சூழல்" என காரணம் கூறப்பட்டுள்ளது.
காவல்துறைத் தலைவர் ஜோஷ் கிப்சன் நகர மேலாளர் ஸ்டின் ஜோன்ஜஸுக்கு (Justine Jones) எழுதிய கடிதத்தில் "கென்லி காவல் துறையில் எனது 21 ஆண்டுகளில், நாங்கள் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டோம். ஆனால், குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில், நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். இருப்பினும், தற்போது உள்ள விரோதமான பணிச்சூழல் காரணமாக கென்லி நகரம், முன்னேற்றம் சாத்தியம் என்று நான் நம்பவில்லை" என்று எழுதினார்.
மற்றொரு அதிகாரி ஜிடபிள்யூ ஸ்ட்ராங் "துரதிர்ஷ்டவசமாக, எனது பாதுகாப்பை பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன, மேலும் கென்லி பொலிஸ் அதிகாரிக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று என்னை கேள்வி கேட்க வைக்கிறது" என்று எழுதியுள்ளார்.
ஆனால், இந்த வெகுஜன வெளியேற்றத்திற்கு இனவெறி காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நகர மேலாளர் Justine Jones ஒரு கறுப்பின அமெரிக்கர் ஆவார்.
30 வேட்பாளர்களின் 'தேசிய அளவிலான தேடலுக்கு' பிறகு கென்லி நகர சபையால் ஜோன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அதிகாரிகள் கடந்த மாதம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
correction: entire police department quits because town hires Black woman https://t.co/PmlccrIzZW
— The Bachelor Diaries (@thebachdiaries) July 22, 2022
மினசோட்டா, வர்ஜீனியா, தென் கரோலினா மற்றும் இப்போது வட கரோலினாவில் உள்ள உள்ளூர் அரசாங்கங்களில், கடந்த 16 ஆண்டுகளாக பொதுச் சேவையில் பணியாற்றி வருகிறார்.
ரிச்லேண்ட் கவுண்டியில் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கடந்த மாத தொடக்கத்தில் தனது தற்போதைய பதவிக்கு பட்டியலிடப்படுவதற்கு முன்பு அவர் தனது சொந்த ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரிந்தார்.