ஒரு பந்து கூட சந்திக்காமல் பரிதாபமாக அவுட் ஆகி வெளியேறிய மோர்கன்! வெளியான வீடியோ காட்சி
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான இயான் மோர்கன் ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 1133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பின் ஆடிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் கொல்கத்தா அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...
இந்நிலையில், இப்போட்டியில் ஆட்டத்தின் 10.1 பந்தை எதிர் கொண்ட திரிப்பாதி, அதை அடித்து ஆட முற்பாடினார். ஆனால், அது எதிர்பார்தவிதமாக எதிர் திசையில் நின்று கொண்டிருந்த மோர்கன் மீது பட்டு, பந்து வீச்சாளர் மோர்கனிடம் செல்ல, அதை அப்படியே பிடித்து கிறிஸ் மோரிஸ் ரன் அவுட் ஆக்கினார்.
இதனால் இயான் மோர்கன் ஒரு பந்தைக் கூட பிடிக்காமல் பரிதாபமாக வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.