இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களிடையே பரவும் தொற்றுநோய்: அது என்ன நோய்?
இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களிடையே ஒரு தொற்றுநோய் பரவிவருகிறது.
இங்கிலாந்தில் மட்டும் இந்த ஆண்டில் சுமார் 50 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த நோய் இங்கிலாந்தில் அபூர்வமான ஒன்றாகும்.
புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழப்பு
இங்கிலாந்திலுள்ள Manston என்னும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்தில் தங்கியிருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு இந்த நோய் இருந்தது தெரியவந்துள்ளது.
இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இந்நோய்த் தொற்று கொண்ட சில புலம்பெயர்ந்தோர், Manston புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்திலிருந்து நாட்டின் பிற பாகங்களுக்குச் சென்றுள்ளார்கள் என்பதுதான்.
image - news.sky
அது என்ன நோய்?
இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களிடையே பரவிவரும் அந்த நோயின் பெயர், டிப்தீரியா அல்லது தொண்டை அடைப்பான் நோய் என்பதாகும்.
பயங்கரமாக பரவும் இந்த டிப்தீரியா என்பது கொரினிபாக்டீரியம் டிப்தீரியே என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா வகை கிருமியால் உருவாகும் ஒரு நோயாகும்.
இந்த கிருமி ஒரு நச்சுப்பொருளை உருவாக்கும். அந்த நச்சுப்பொருள், சுவாசப்பாதையிலுள்ள ஆரோக்கியமான திசுக்களைக் கொன்று மூக்கிலும் தொண்டையிலும் பிரச்சினைகளை உருவாக்கும்.
அத்துடன், அது தோலையும் பாதித்து கொப்புளங்கள் மற்றும் புண்களையும் உருவாக்கக்கூடும்.
1940களிலிருந்து, டிப்தீரியா, போலியோ மற்றும் டெட்டனஸ் என்னும் மூன்று பிரச்சினைகளுக்காக, முத்தடுப்பு ஊசி எனப்படும் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருவதால், இந்நோய் பிரித்தானியாவில் அரிதாகவே காணப்பட்டுவந்தது.
இருமல், தும்மல், மற்றும் நோய் தொற்றியவருடன் நெருக்கமாக பழகுவதால், இந்நோய் மற்றவர்களுக்கு பரவும்.
என்றாலும், தடுப்பூசியுடன், இந்நோய்க்கு சிகிச்சையும் உள்ளது என்பது ஆறுதலளிக்கும் ஒரு செய்தியாகும்.