மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பரிசளித்த எடப்பாடி பழனிச்சாமி
தன் உயிரை பொருட்படுத்தாமல் மின்சாரம் பாய்ந்த சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரிசளித்துள்ளார்.
எடப்பாடி பரிசளிப்பு
கடந்த 16-ம் திகதி அன்று சென்னை அரும்பாக்கத்தில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற ரேகன் (8) என்ற 3-ம் வகுப்பு மாணவனுக்கு மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர், ஒரத்தநாட்டைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, சிறுவனை பார்த்ததும் தனது உயிரை பொருட்படுத்தாமல் அச்சிறுவனைக் காப்பாற்றினார்.
இந்நிலையில், சிறுவனைக் காப்பாற்றிய இளைஞரின் துணிவைப் பாராட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவரை வீட்டிற்கு வரவழைத்து தங்க மோதிரத்தை பரிசளித்து வாழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |