விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை தலைவராக இருப்பவர் ஆனந்தகுமார். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் தனது பதிவில், "அன்பு அண்ணன், மக்கள் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று கூறியிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனந்தகுமாரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அவருடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |