ஜேர்மனியில் அமுலுக்கு வரும் புதிய விதி.. பிரபல நாடு ஆபத்து பகுதியாக அறிவிப்பு
ஸ்பெயினில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டை ஆபத்து பகுதியாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
Majorea மற்றும் the Canary தீவுகளையும் ஆபத்து பகுதியாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
இனி ஜேர்மனி பயணிப்பதற்கு 10 நாட்களுக்குள் முன் ஸ்பெயின் பயணித்த பயணிகள் கொரோனா இல்லை அல்லது நோய்த்தடுப்புக்கான ஆதாரம், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது தொற்றிலிருந்து மீண்டதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த புதிய விதி அமுலுக்கு வரும் என ஜேர்மனி அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில், ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புக்கு தடுப்பூசி போடாத நபர்கள் மூலம் டெல்டா மாறுாபடு தீவிரமாக பரவுவதே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் நாட்டு மக்கள் கோடை விடுமுறைக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என நேற்று பிரான்ஸ் அறிவுறுத்தது குறிப்பிடத்தக்கது.