ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வான்வெளி தடை: ஜேர்மனியில் சிக்கிக்கொண்ட ரஷ்ய விமானங்கள்!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான்பரப்பில் ரஷ்ய விமங்கள் பறக்க தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இந்த வான்வெளி தடையை பிப்ரவரியில் அறிவித்தது.
ரஷ்யாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் வான்வெளியை மூடி, ஏறக்குறைய அரை வருடம் ஆகிவிட்ட நிலையில், ரஷ்யர்களுக்கு சொந்தமான அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள 10 விமானங்கள் ஜேர்மனியில் சிக்கி இருப்பதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
"ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் காரணமாக விமானங்கள் புறப்பட மற்றும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை அவற்றின் உரிமையாளரால் பயன்படுத்த முடியாது மற்றும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாது" என்று ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்று ரஷ்ய அன்டோனோவ் AN-124 விமானங்கள் Leipzig-ல் தரையிறக்கப்பட்டன, ஒரு பாம்பாடியர் ஜெட் விமானம் மற்றும் ஒரு போயிங் 737 Cologne-ல் உள்ளன, மற்றும் ஒரு போயிங் 747 பிராங்பேர்ட்-ஹான் விமான நிலையத்தில் உள்ளன.
மேலும் நான்கு ஜெட் விமானங்கள் தென்மேற்கு நகரமான Baden-Baden-ல் உள்ள விமானநிலையத்தில் உள்ளன என்று dpa ஊடக நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான அதன் தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுக்கான அதன் வான்வெளியை மூடியது.
© Jan Woitas/dpa-Zentralbild/dpa