புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஜேர்மனியில் புகலிடம் கோரிய புலம்பெயர்ந்தோர் ஒருவருக்கு ஆதரவாக ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஐரோப்பாவின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
ஆப்கன் நாட்டவர் ஒருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரிய நிலையில், அவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ரொமேனியாவில் புகலிடம் கோரியிருந்ததால் அவரது புகலிடக்கோரிகையை ஜேர்மனி நிராகரித்துவிட்டது.

அதைத் தொடர்ந்து, அவர் முதலில் புகலிடம் கோரிய ரொமேனியாவுக்கு அவரை நாடுகடத்தும் நடைமுறைகள் துவக்கப்பட்டன.
விடயம் என்னவென்றால், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படதுமே, அவருக்கு வழங்கப்பட்டுவந்த உடை மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
அதை எதிர்த்து பவேரியா மாகாணத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார் அவர்.
அந்த வழக்கு அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியாக ஐரோப்பிய நீதித்துறை நீதிமன்றத்தைச் சென்றடந்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
உடை முதலான விடயங்கள் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று கூறியுள்ள நீதிமன்றம், பயணிப்பதற்காக பயணச்சீட்டு மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், மனிதன் தன் கலாச்சாரத்துக்கேற்ப வாழ்வதற்கும், சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்குமான குறைந்தபட்ச தேவைகள் என்றும் கூறியுள்ளது.
மேலும், இந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி, மனிதனின் அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்படுவதை உறுதி செய்வதுடன், புகலிடம் கோரியவரின் உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கவும் செய்கின்றன என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆக, புகலிடக்கோரிக்கையாளர்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உதவிகள் நிறுத்தப்படக்கூடாது என தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |