கடைசி தடை நீங்கியது! பிரித்தானியா உடனான முக்கிய ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்
பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பிரெக்ஸிட்-க்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் மீது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பிரெக்ஸிட்-க்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு ஏப்தல் 27ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடந்தது.
வாக்கெடுப்பு செவ்வாயன்று நடந்தது, ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக முடிவுகள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இன்று ஏப்ரல் 28ம் திகதி நாடாளுமன்றம் வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டது.
அதன் படி, 660 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், 5 பேர் மட்டுமே எதிராக வாக்களித்துள்ளனர், 32 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பிரெக்ஸிட்-க்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்திற்கான முழு ஒப்புதலுக்கான கடைசி தடை நீங்கியது.
ஐரோப்பிய ஒன்றியம்-பிரித்தானியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடாளுமன்றம் வாக்களித்ததை நான் வரவேற்கிறேன் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen ட்விட்டரில் தெரிவித்தார்.
I warmly welcome the @Europarl_EN vote in favour of the EU-UK Trade and Cooperation Agreement.
— Ursula von der Leyen (@vonderleyen) April 28, 2021
The TCA marks the foundation of a strong and close partnership with the UK. Faithful implementation is essential. pic.twitter.com/aTU7cOB5Ck
டி.சி.ஏ (வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்) பிரித்தானியா உடன் வலுவான மற்றும் நெருக்கமான கூட்டணியின் அடித்தளத்தை குறிக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படுத்துதல் அவசியம் என Ursula von der Leyen குறிப்பிட்டுள்ளார்.