2027 முதல் ஐரோப்பாவில் மொபைல் போன்களில் மாற்றக்கூடிய பேட்டரி கட்டாயம்
ஐரோப்பிய ஒன்றியம் (EU) புதிய பேட்டரி விதிகளை அறிவித்துள்ளது.
2027 பிப்ரவரி 18 முதல், மொபைல் போன்கள், டேப்லெட்கள் மற்றும் வயர்லெஸ் சாதனங்களில் பேட்டரிகள் எளிதில் அகற்றவும் மாற்றவும் கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
இப்போது பெரும்பாலான சாதனங்களில் பேட்டரிகள் ஒட்டப்பட்டு, சேவை மையம் இல்லாமல் மாற்ற முடியாத நிலையில் உள்ளன.
புதிய விதியின்படி, பயனர்கள் தாமாகவே சாதாரண கருவிகள் அல்லது கருவிகள் இல்லாமலேயே பேட்டரியை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.

உற்பத்தியாளர்கள் தனிப்பட்ட கருவிகளை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்படக்கூடாது. அவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
இந்த மாற்றம், சாதனங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும், பழுது பார்க்க எளிதாக்கும், மற்றும் மின்கழிவு குறைக்கும்.
பேட்டரிகள் அகற்றப்பட்ட பின், அவை சரியான மறுசுழற்சி மற்றும் சேகரிப்பு முறைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதும் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதி ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் தாக்கம் ஏற்படுத்தும்.
USB-C சார்ஜிங் போர்ட் போல, உற்பத்தியாளர்கள் ஒரே மாதிரி வடிவமைப்பை உலகம் முழுவதும் பயன்படுத்துவார்கள். அதனால், இந்தியா போன்ற நாடுகளிலும் எதிர்காலத்தில் மாற்றக்கூடிய பேட்டரியுடன் கூடிய போன்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |