இங்கிலாந்து vs டென்மார்க் அரையிறுதி "மீண்டும் நடத்தப்பட வேண்டும்" - ரசிகர்கள் மனு!
புதன்கிழமை இரவு டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த யூரோ 2020 கடைசி அரையிறுதி ஆட்டத்தை மீண்டும் நடத்தவேண்டும் என ரசிகர்கள் மனு அளித்துவருகின்றனர்.
நேற்று டென்மார்க் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலமாக, 55 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜுலே 11-ஆம் திகதி லண்டன் வெம்ப்லி அரங்கத்தில் யூரோ 2020 இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது, இதில் இத்தாலிக்கு எதிராக இங்கிலாந்து அணி போட்டியிடவுள்ளது.
இந்தநிலையில், நேற்று டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த கடைசி அரையிறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என கோபமுற்ற ரசிகர்கள் பலர் EUFA-க்கு ஓன்லைன் மூலமாக மனு அளித்து வருகின்றனர்.
Very Superb Dive pic.twitter.com/FcVyVlBgbW
— ProudlyAnioma_Ezechime (@ProudlyAnioma) July 7, 2021
நேற்றைய ஆட்டத்தின் இறுதியில், இரு அணிகளும் தல 1 கோல் எடுத்திருந்த நிலையில், டென்மார்க் வீரர் ஜோகிம் மேஹ்லே இடித்ததால் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் (Raheem Sterling) கீழே விழுந்தார். இதனால் டென்மார்க் அணிக்கு பெனாலிட்டி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணிக்கு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்பமாகவும், இங்கிலாந்து அணியின் 2-வது கோலுக்கும், வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
இதில், ரஹீம் ஸ்டெர்லிங் பெனாலிட்டி கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே 'டைவ்' அடித்ததாக சில ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த சுழ்நிலையில், ரஹீம் ஸ்டெர்லிங்கிற்கு கூடுதல் நேரத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டுமா?
இதை இங்கிலாந்து ரசிகர்களிடம் கேட்டால்., ஆம் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும் என்பார்கள். ஜோகிம் மேஹ்லே (Joakim Maehle) பந்தை ஸ்வைப் செய்து ஸ்டெர்லிங்கின் காலில் இடித்ததார் என கூறுவார்கள்.
Let's be clear...this is NOT a dive! The freekick denmark scored shouldn't be awarded then either cos that was soft too. Contact was made in the box, VAR checked and it was awarded. Great run by @sterling7 #ItsComingHome @England #bbceuro2020 #England #englandvdenmark #Sterling pic.twitter.com/6ge6FBaU6J
— SJ afc (@SJ_arsenal) July 8, 2021
டென்மார்க் ரசிகர்களுக்கும், பெரும்பாலான நடுநிலையாளர்களுக்கும் அப்படி தோன்றவில்லை. ஸ்டெர்லிங் மற்றும் ஜோகிம் இடையே எந்த தொடர்பும் இல்லை, அல்லது அது மிகக் குறைந்த ஒரு உராய்வு என்றே கூறுகின்றனர். இதற்கு ஸ்டெர்லிங் கீழே விழுந்தது நியாயப்படுத்த முடியாது. அவர் வேண்டுமென்றே பேனாலிட்டி கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக டைவ் அடித்துள்ளார் என கூறப்படுகிறது.
அத்தகைய கோபத்தில் இருக்கும் ஒரு ரசிகர் இந்த ஆட்டத்தை மீண்டும் நடத்த, UEFA-க்கு change.org என்ற வலைதளத்தின் மூலமாக ஒரு மனுவை அளித்துள்ளார். இந்த மனுவுக்கு இதுவரை 1,000-க்கும் குறைவானவர்களே ஆதரவு தெரிவித்தது ரெஜிஸ்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், EUFA இந்த போட்டியை நிச்சயமாக மீண்டும் நடத்த வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.