யூரோ 2020: 'இத்தாலிக்கு போக வேண்டாம்' பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
யூரோ 2020 கால் இறுதிப் போட்டியைக் காண இங்கிலாந்து ரசிகர்கள் இத்தாலிக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவில் பல நாடுகளில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று Wembley மைதானத்தில் நடைபெற்ற 2-வது சுற்றில், ஜேர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-0 என்று கோல் கணக்கில் அப்பரை வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், வரும் ஜூலை 3-ஆம் திகதி சனிக்கிழமை அன்று இங்கிலாந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே யூரோ 2020 கால் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
ஆனால், இந்தப் போட்டி இத்தாலியில் ரோம் நகரத்தில் உள்ள Stadio Olimpico விளையாட்டு மைதானத்தில் நடை பெறுகிறது. இந்த போட்டியைக் காண இங்கிலாந்து ரசிகர்கள் இத்தாலிக்கு செல்ல ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பிரித்தானிய அரசு, ரசிகர்களை இத்தாலிக்கு செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும், கால் இறுதிப் போட்டியை வீட்டிலிருந்தே தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவின் பச்சை, மஞ்சள், சிகப்பு பட்டியலில், இத்தாலி மஞ்சள் நிற நாடுகளின் பட்டியலில் உள்ளது. அதாவது, அந்நாட்திலிருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள், 5 நாட்கள் தனிமைப்பத்திக்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பிரித்தானியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இத்தாலி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.