யூரோ கால்பந்து! கடைசி நேரத்தில் ஆட்டத்தையே மாற்றிய இத்தாலி வீரர்! தலையில் கையை வைத்த இங்கிலாந்து
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தின், கடைசி நேரத்தில் இத்தாலி வீரர் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிய கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கிடையேயான இந்த போட்டி லண்டனில் இருக்கும் Wembley மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், ஆட்டம் துவங்கிய 1.57-வது நிமிடத்திற்குள்ளே இங்கிலாந்து வீரர் Luke Shaw அற்புதமாக கோல் அடித்து மிரட்டினார். இதை யாருமே எதிர்பார்க்கவேயில்லை, போட்டி துவங்கி இத்தாலி வீரர்கள் யோசிப்பதற்குள்ளே, Luke Shaw தனது அணிக்கான கோல் கணக்கை துவங்கினார்.
அதன் பின் இரு அணிகளுமே கோல் போட பல முயற்சிகள் மேற்கொண்டும், இரு அணி வீரர்களும் அனல் பறக்கும் வேகத்தில் விளையாடினர்.
ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்க, இங்கிலாந்து 1-0 என்று முன்னிலையில் இருந்ததால், நேரத்தை மட்டும் ஓட்டினால் போதும் என்பது போல் இங்கிலாந்து வீரர்கள் விளையாட துவங்க, அந்த அசந்த நேரத்தில், அதாவது 83-வது நிமிடத்தில், இத்தாலி வீரர் leonardo bonucci கோல் அடித்தார்.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் சிலர் இந்த கோலுக்கு தலையில் கையை வைத்த படி இருந்தனர். போட்டியின் முடிவில்(90 நிமிடம்) இரு அணிகளுமே ஆட்ட நேர முடிவில் 1-1 என்று சம நிலை வகித்தது. கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
இந்த கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால், போட்டி அடுத்த கட்டமான பெனால்ட்டி ஷுட்டிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.