யூரோ கால்பந்து சாம்பியன் ஆன இத்தாலிக்கு கொடுக்கப்படும் பரிசுத் தொகை! மற்ற அணிகளுக்கும் எவ்வளவு கொடுக்கப்படும்? வெளியான பட்டியல்
யூரோ கால்பந்து தொடரில் சாம்பியன் ஆன இத்தாலி மற்றும் ரன்னர் அப் ஆன இங்கிலாந்திற்கு கொடுக்கப்படும் பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அணிகளுக்கிடையேயான யூரோ கால்பந்து தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. சுமார் ஒரு மாதமாக கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைந்த இந்த தொடர், இன்றோடு முடிவுக்கு வந்தது.
இன்று லண்டனில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதின. இதில் பெனால்ட்டி ஷுட்டில் இத்தாலி 3-2 என்று வெற்றி பெற்றது.
இதையடுத்து அவர்களுக்கு யூரோ கோப்பை கொடுக்கப்பட்டது. இதில் கோப்பை வென்ற அணிக்கு, இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த இடத்தை பிடித்த அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கொடுக்கப்படும் என்ற விவரத்தை பிரபல ஆங்கில ஊடகமாக ஸ்போர்ட்டிங் நியூஸ் வெளியிட்டுள்ளது.
யூரோ கால்பந்து தொடரின் பரிசுத் தொகை விவரம்(2020)
- இத்தாலி(சாம்பியன் அணி)-€10,000,000(இலங்கை மதிப்பில் 2,36,13,88,306 கோடி ரூபாய்)
- இங்கிலாந்து(ரன்னர் அப்)-€7,000,000 (இலங்கை மதிப்பில் 1,65,29,71,814 கோடி ரூபாய்)
- அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்-€5,000,000(இலங்கை மதிப்பில் 1,18,06,94,153 கோடி ரூபாய்)
- கால் இறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்- €3,250,000 (இலங்கை மதிப்பில் 76,74,77,051 கோடி ரூபாய்)
- நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்(Round of 16)-(இலங்கை மதிப்பில் 47,22,95,559 கோடி ரூபாய்)