யூரோ கால்பந்தில் மோதலின் உச்சம்! இங்கிலாந்து வீரரின் காலரை பிடித்து தள்ளிய இத்தாலி கேப்டன்? வெளியான புகைப்படம்
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இத்தாலி கேப்டன், இங்கிலாந்து வீரரின் காலரை பிடித்து இழுக்கும் புகைப்படம் வெளியாகி, இங்கிலாந்து ரசிகர்கள் பலரையும் கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் விம்ளியில், யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளுமே 1-1 என்று சமநிலை வகித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்திலும், கோல் அடிக்கப்படாத காரணத்தினால், தற்போது இந்த போட்டி பெனால்ட் ஷுட்டை நோக்கி செல்லவுள்ளது.
இந்நிலையில், போட்டியின் போது, இத்தாலி அணியின் கேப்டன் Giorgio Chiellini இங்கிலாந்து வீரர் Saka அற்புதமாக பந்தை கொண்டு சென்று கொண்டிருந்த போது, அவரது டீ சர்ட்டின் காலரை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.
இதைக் கண்ட இங்கிலாந்து ரசிகர்கள், இது ஒரு மோசமான விளையாட்டு, இப்படியா? வெற்றி வேண்டும் என்றால் திறமையை காட்ட வேண்டும், இப்படி காட்டுமிராண்டித்தனமாக தள்ளக் கூடாது, சிவப்பு அட்டை ஏன் கொடுக்கவில்லை, மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது ஏன்? என்று இணையத்தில், அந்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.