லொட்டரியில் வென்ற 27 மில்லியன் பவுண்டுகள்... வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பெண்மணி
பிரித்தானியாவில் EuroMillions லொட்டரியில் 27 மில்லியன் பவுண்டுகள் வென்ற பெண்மணி ஒருவர் தமது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லொட்டரியில் பெருந்தொகை வென்றதால் தமது மொத்த வாழ்க்கையும் நாசமானது என கவலைப்பட்ட Margaret Loughrey என்பவரே இன்று பகல் தமது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டவர்.
தற்போது 50 வயதைக் கடந்துள்ள Margaret Loughrey சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் EuroMillions லொட்டரியில் 27 மில்லியன் பவுண்டுகள் அள்ளினார்.
இந்த நிலையில் அவரது மரணத்தை சந்தேகத்திற்கிடமானதாகக் கருதவில்லை என்றும் உரிய நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ல் EuroMillions லொட்டரியில் 27 மில்லியன் பவுண்டுகள் வென்றது வட அயர்லாந்தில் அப்போதைய லொட்டரி வரலாற்றில் பெருந்தொகையாக கருதப்பட்டது. லொட்டரியில் பெருந்தொகை வென்ற பின்னரும் தமது சொந்த நகரத்திலேயே Margaret வாழ்ந்து வந்தார்.
மேலும், குடியிருப்புகள், ஆலை, மதுபான விடுதி உட்பட உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரது வாழ்க்கை தலைகீழாக மாறத்தொடங்கியது. 2015ல் டாக்ஸி சாரதி ஒருவரை தாக்கியதாக கூறி தண்டிக்கப்பட்டார்.
மூன்றாண்டுகளுக்கு பிறகு முன்னாள் ஊழியர் ஒருவருக்கு 30,000 பவுண்டுகள் இழப்பீடாக அளிக்கும் நிலை ஏற்பட்டது. 2019ல் தம்மிடம் வெறும் 5 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் பகிரங்கமாக தெரிவித்ததுடன், கள்வர்கள் தம்மை நோட்டமிடுவதாகவும் அச்சம் தெரிவித்திருந்தார்.
EuroMillions லொட்டரியில் பெருந்தொகையை வென்றதன் பின்னரே தமது வாழ்க்கை நாசமானது என Margaret பலமுறை கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.