ஜேர்மன் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்., குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை!
ஜேர்மனி மற்றும் போலந்து இடையே ஓடும் ஓடர் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.
இது, சுற்றுச்சூழல் பேரழிவு பற்றிய பெரும் எச்சரிக்கைகளைத் தூண்டியது.
மேலும் குடியிருப்பாளர்கள் தண்ணீரிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஜேர்மன் கரையோரங்களில் மிதக்கும் மீன்கள் போலந்தில் இருந்து மேலோட்டமாக மிதந்து வந்ததாக நம்பப்படுகிறது. அங்கு ஜூலை 28-ஆம் திகதியன்று உள்ளூர் மக்களும் மீன் பிடிப்பவர்களும் பெருமளவில் மீன்கள் இறந்ததாக முதல் தகவல் வெளியானது.
உயிரற்ற ஆயிரக்கணக்கான மீன்கள் கடுமையான துர்நாற்றத்துடன் நதிக்கரைகளில் ஒதுங்கியதைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த ஜேர்மன் அதிகாரிகள், இது குறித்து போலந்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்க தவறியதாக குற்றம் சாட்டினர்.
Annegret Hilse/Reuters
மேலும், போலந்து அரசு விரைவான நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனை "சுற்றுச்சூழல் பேரழிவு" என்று அழைத்த ஜேர்மன் சுற்றுச்சூழல் மந்திரி ஸ்டெஃபி லெம்கே, இது பற்றி விரிவான விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இது உக்குறித்து பேசிய போலந்து பிரதமர் Mateusz Morawiecki "அநேகமாக மிகப்பெரிய அளவிலான இரசாயன கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.
Annegret Hilse/Reuters
அதேசமயம், மீன்கள் பெருமளவில் இறப்பதற்குக் காரணம், ஓடர் ஆற்றில் உள்ள அறியப்படாத, அதிக நச்சுப் பொருள் எனத் தோன்றுகிறது என்று ஜேர்மன் மாநிலமான பிராண்டன்பர்க் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாநில ஆய்வகம் ஒன்று தண்ணீர் மாதிரிகளில் அதிக அளவு பாதரசம் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக உள்ளூர் ஒளிபரப்பாளர் RBB இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீரில் பாதரசம் இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலந்தின் தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் கூறினார்.
போலந்து மற்றும் ஜேர்மனி முழுவதும் எத்தனை மீன்கள் இறந்தன என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்று பேர்லினைச் சுற்றியுள்ள மாநிலமான பிராண்டன்பேர்க்கில் உள்ள அமைச்சகம் கூறியது.
Annegret Hilse/Reuters
இந்த வார தொடக்கத்தில் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், உக்கர்மார்க் மற்றும் பர்னிம் மாவட்டங்களில் உள்ள ஜேர்மனியர்கள், மலைகள் மற்றும் இயற்கை இருப்புக்களின் தாயகமாக, ஓடர் மற்றும் அருகிலுள்ள கால்வாயில் இருந்து நீரைத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு குடிமக்களை அறிவுறுத்தினர்.
மேலும் ஓடர் ஆற்றில் ஜூலை பிற்பகுதியில் இருந்து டன் கணக்கில் இறந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டுவருகிறது.
ஆற்றின் கீழே ஓடும் இறந்த மீன்களை சேகரிக்க கோஸ்ட்ரிசின் நகருக்கு அருகில் ஓடர் மீது ஒரு தடுப்பை அமைக்க போலந்து திட்டமிட்டுள்ளது, 150 பிராந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.