ஜேர்மன் நகரமொன்றையே ஸ்தம்பிக்கவைத்துள்ள சம்பவம்: விவரம் செய்திக்குள்
ஜேர்மன் நகரமொன்றில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தால் அந்நகரமே ஸ்தம்பித்துப்போயுள்ளது.
நகரத்தையே ஸ்தம்பிக்கவைத்துள்ள சம்பவம்
ஜேர்மன் நகரமான Cologneஇல், 1,000 கிலோ மற்றும் 500 கிலோ எடையுள்ள இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை, 80 ஆண்டுகளுக்குமுன், இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்டவையாகும்.
குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Cologne நகரில் வாழும் 20,000 பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.
தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன, ஹொட்டல்கள், முதியோர் இல்லம் ஒன்று, ஒரு மருத்துவமனை ஆகியவையும் மூடப்பட்டு, அவற்றிலிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மூன்று பாலங்கள் மூடப்பட்டுள்ளன, ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. பல பள்ளிகள், அருங்காட்சியகங்கள், ட்ராம் சேவை, கலையரங்கம் ஒன்று என அனைத்தும் செயல்படாத நிலையில், மொத்தத்தில் நகரமே ஸ்தம்பித்துப்போயுள்ளது.
அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது தொடர்பில் அதிகாரிகள் திட்டமிட்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |