மே மாதம் 1ஆம் திகதி முதல் ஜேர்மனியில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்
தடுப்பூசி பாஸ்போர்ட் முதல் பெற்றோர்களுக்கு பண உதவி வரை மே மாதம் ஜேர்மனியில் பல மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
மே 1 முதல் பெயிண்டர்கள் முதலானவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட உள்ளது. சனிக்கிழமை முதல் ஜேர்மனியில் இளைஞர் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வர உள்ளது.
அதன்படி, இணையத்தில் விளையாடும் விளையாட்டுகள் மற்றும் திரைப்படங்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான வகையில் அமையும் வகையிலான தொழில்நுட்ப கட்டுப்பாடுகள் செய்யப்ப உள்ளன.
கொரோனா காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கொரோனா போனஸ் 2020இல் வழங்கப்பட்டதுபோல, 2021இலும் கூடுதலாக 150 யூரோக்கள் வழங்கப்படும்.
மே மாதம் முதல் சர்வதேச தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த ஸ்மார்ட்போன் ஆப் கொரோனா காலகட்டத்தில் பயணிகள் விமானப் பயணம் செய்யவும், தனிமைப்படுத்தலை தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.
மே மாதம் 15ஆம் திகதி முதல், வாட்ஸ் ஆப்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்த புதிய மாற்றத்துக்கு நீங்கள் கட்டுப்படாவிட்டால், 120 நாட்களுக்கு
உங்களால் செய்திகளையும் அழைப்புகளையும் பெறமட்டுமே முடியும், உங்களால்
செய்திகளை அனுப்ப முடியாது. 120 நாட்களுக்குப் பின் உங்கள் கணக்கு நிரந்தரமாக
நீக்கப்பட்டுவிடும்.