உக்ரைன் போரால் சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட இருந்த ரஷ்யருக்கு அடித்த அதிர்ஷ்டம்
உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யர் ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தும் முடிவில் எதிர்பாராத பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
St Petersburgஇல் அமைந்துள்ள பால்டிக் வங்கியின் இணை உரிமையாளர் Oleg Schigajew. சுமார் 50 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான நிதி மோசடி செய்ததாக அவர் ரஷ்யாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழும் அவரை ரஷ்யாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்தது சுவிட்சர்லாந்து.
ஆனால், தற்போது உக்ரைன் போர் காரணமாக அந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 15ஆம் திகதி, ரஷ்யா தான் ஐரோப்பிய ஆணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஆகவே, இனி ரஷ்யாவுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து யாரையும் நாடுகடத்துவது சட்டப்படி சாத்தியமில்லை (ரஷ்யாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும்தான்!).
எனவே, சுவிஸ் பெடரல் நீதித்துறை, Schigajewவை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அதற்கு எவ்வித தடையுமில்லை என்றும் சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022