செய்யாத தவறுக்கு 30 ஆண்டு சட்டப்போராட்டம் - விடுதலையான மறுநாளே உயிரிழப்பு
செய்யாத தவறுக்கு 30 ஆண்டு சட்டப்போராட்டம் நடத்திய பொலீஸ் கான்ஸ்டபிள் நிரபராதி என தீர்ப்பு பெற்ற மறுநாளே உயிரிழந்துள்ளார்.
20 ரூபாய் லஞ்சம்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாபுபாய் பிரஜாபதி என்ற பொலீஸ் கான்ஸ்டபிள், கடந்த 1996 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது லாரியை சட்டவிரோதமாக நகரத்திற்க்குள் அனுமதிக்க 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ACB) புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், வேஜல்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பொலீஸ் கான்ஸ்டபிள்பிரஜாபதி, செவன்குமார் ரத்வா மற்றும் நஸ்ருல்லா கான் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
2004 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்தது.
30 ஆண்டுக்கு பின்னர் நிரபராதி என தீர்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து மூவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4 ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.வி. பின்டோ, சாட்சிகளின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் கூறி மூவரையும் நிரபராதியாக விடுவித்தார்.

விடுதலை செய்யப்பட்டதை அறிந்ததும், பிரஜாபதி அவரது வழக்கறிஞர் நிதின் காந்தியைச் சந்தித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு பிரஜாபதியின் பணி நீக்கம் செய்யப்பட்டது முதல் அவருக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரஜாபதி அதில் ஆர்வம் காட்டவில்லை.
அன்று தனது மருமகன் வீட்டில் தங்கிய அவருக்கு தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |