ஐபிஎல் மெகா ஏலத்தில் CSK வாங்க போகும் முதல் வீரர் இவர் தான்! வெளிப்படுத்திய முன்னாள் நட்சத்திரம்
2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி வாங்க போகும் முதல் வீரர் குறித்து முன்னாள் சிஎஸ்கே நட்சத்திரம் ராபின் உத்தப்பா தகவல் தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் சீசனுக்காக தோனி, ஜடேஜா, கெய்க்வாட் மற்றும் மொயின் அலியை சென்னை அணி தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி வாங்க போகும் முதல் வீரர் ரெய்னாவாக தான் இருக்கும் என உத்தப்பா தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலம் ரெய்னா தான் என நான் நினைக்கிறேன். கடந்த 10-12 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி பல நாக்அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்ற ரெய்னா முக்கிய நபராக திகழ்ந்தார்.
ரெய்னா சென்னை அணியின் முக்கிய தூணாக இருந்துள்ளார். எனவே, ஏலத்தில் சென்னை அணி வாங்க போகும் முதல் வீரர் அவர் தான் என நான் நினைக்கிறேன் என உத்தப்பா தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சென்னை அணி டுபிளசிஸ்-க்கு பதில் மொயின் அலியை தக்க வைத்தற்கான காரணத்தையும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
மொயின் அலியிடம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு திறமைகளும் இருப்பதால் டுபிளசிஸ்-க்கு பதிலாக சென்னை அணி அவரை தக்க வைத்ததாக உத்தப்பாக கூறியுள்ளார்.