ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ன காரணமாக இருந்திருக்கக்கூடும்? முன்னாள் விமானியின் கருத்து
இந்தியாவிலிருந்து வியாழனன்று லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர மற்ற அனைவரும் பலியாகிவிட்டார்கள்.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து முன்னாள் விமானி ஒருவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விமானியின் கருத்து
யூடியூபரும், முன்னாள் விமானியுமான கேப்டன் ஸ்டீவ் சென் என்பவர், ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகும் வீடியோ காட்சிகளைக் கண்டபின், விபத்துக்கான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் சக விமானியின் ஒரு சிறு தவறு விமான விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என தான் கருதுவதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
அதாவது, விமானி, விமானம் தரையிலிருந்து உயர எழுந்ததும், landing gearஐ உள்ளிழுக்கும் லீவரை இயக்குமாறு தன் சக விமானியிடம் கூறியிருக்கலாம்.
இந்த landing gear என்பது, விமானத்தை தரையிறக்கவும், விமானம் உயர எழும்பவும் பயன்படும், விமானத்தின் சக்கரங்களுடன் தொடர்புடைய ஒரு அமைப்பாகும்.
ஆனால், சக விமானி அதற்கு பதிலாக, விமானம் மேல் நோக்கி ஏறும்போதும், இறங்கும்போதும் அதற்கு உதவியாக இருக்கக்கூடிய மற்றொரு பாகமான, விமானத்தின் இறக்கையில் உள்ள wing flaps என்னும் அமைப்பின் லீவரை இயக்கியிருக்கலாம் என்றும் அப்படி நடந்தால் விமானம் மேல் நோக்கி ஏறாது என்றும் கூறுகிறார் ஸ்டீவ்.
அவர் கூறுவதுபோலவே, வீடியோக்களில், விபத்துக்குள்ளான விமானத்தின் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாமல் இருப்பதைக் காணமுடிகிறது. என்றாலும், இது தனது கருத்து மட்டுமே என்றும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டீவ்.
விடயம் என்னவென்றால், இந்திய நிபுணர்களும் இதே கருத்தைத்தான் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |