பழுதடைந்த கோழி இறைச்சியை விற்பனை செய்த KFC நிறுவனம் - அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இலங்கையின் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் பழுதடைந்த கோழியை விற்பனை செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
பழுதடைந்த கோழியை விற்பனை செய்த KFC
இலங்கையின் கொழும்பு பிரதேசத்தில் இராஜகிரியவில் உள்ள KFC நிறுவனத்தில் தாம் உட்கொண்ட கோழி இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு வந்துள்ளது.
இதனையடுத்து, பழுதடைந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாவும் முடிவு வெளிவர 10 நாட்கள் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |