ஜேர்மன் நகரை உலுக்கிய பயங்கர வெடி விபத்து.. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தல்! வெளியான அதிர வைக்கும் காட்சி!
ஜேர்மனியில் உள்ள இரசாயன பூங்காவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leverkusen உள்ள இரசாயன பூங்காவில் ஏற்பட்ட பயங்கர வெடி அந்நகரையே உலுக்கியுள்ளது.
இரசாயன பூங்காவில் வெடி விபத்து ஏற்பட்டு வானுயர கரும்புகை எழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Leverkusen-ல் உள்ள செம்பாரக் தளத்தின் ஆபரேட்டர்கள் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறினர்.
RAW: A huge explosion at a chemical park in the western German city of Leverkusen sent a column of black smoke into the air, with officials urging residents to shelter indoors and close their windows. pic.twitter.com/jc2ehvL9T0
— DW News (@dwnews) July 27, 2021
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஜன்னல் கதவுகளை மூடி வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஐந்து பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.