ஜேர்மனியில் ரயில் நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு!
ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றிற்கு வெளியே குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் முனிச் நகரில் உள்ள Donnersbergerbruecke ரயில் நிலையம் அருகே இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மூனிச் பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்திற்கு வெளியே கட்டுமானப் பணியின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த வெடிப்பு இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டினால் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பை தொடர்ந்து, ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்மின்றி, அப்பகுதி முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துளையிடுதலின் போது, இரண்டாம் உலகப் போரின் 250 கிலோகிராம் எடையுள்ள வான்வழி வெடிகுண்டு மீது தாக்கி வெடித்துச் சிதறியதாகவும், தற்போது அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என உள்துறை அமைச்சர் Joachim Herrmann தகவல் தெரிவத்துள்ளார்.