ஜேர்மன் தலைநகரில் அமைந்துள்ள ரஷ்ய செய்தி ஏஜன்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருளால் பரபரப்பு
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ரஷ்ய செய்தி ஏஜன்சி ஒன்றின் அலுவலக வளாகத்தில் வெடிப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ரஷ்யா தனது வெற்றிவிழாக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் நிலையில், அதற்கும் ரஷ்ய செய்தி ஏஜன்சியில் அந்த வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என பொலிசார் விசாரித்துவருகிறார்கள்.
Ria Novosti என்னும் அந்த செய்தி நிறுவனம் , இது பெர்லினில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதிரான தீவிரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிட வளாகத்துக்குள்ளேயே வேறு அலுவலகங்களும் உள்ளதால், இது திட்டமிட்ட சதியா என்பது தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Einsatzkräfte fanden gestern am Gebäude einer russischen Nachrichtenagentur in #Steglitz einen gefährlichen Gegenstand, bei dem es sich vermutlich um einen Brandsatz handelte.
— Polizei Berlin (@polizeiberlin) May 7, 2022
Er wurde von Spezialisten des #LKA zerstört, der #Staatsschutz ermittelt.https://t.co/h1KhFjFxJV
^tsm