ஆஸ்திரியா ஏரியில் ஜேர்மனியரை கொன்ற மர்ம பொருள்! வெளிவரும் பகீர் தகவல்
பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஏரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஜேர்மனியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆஸ்திரிய மாநிலமான கரிந்தியாவில் உள்ள ஒசியாச் ஏரியிலே இக்கோர சம்பவம் நடந்துள்ளது.
எரிக்கரையில் நீந்திக்கொண்டிருந்த 59 வயதான ஜேர்மனியர், தண்ணீரில் இருந்து மர்ம பொருள் ஒன்றை எடுத்து கையாளும் போது திடீரென அது வெடித்து உயிரிழந்தார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியர் தண்ணீரில் இருந்து வெடிபொருட்களை எடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சம்பவம் நடந்த பகுதி முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிபொருள் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த பொருள் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், இப்போது பிரபலமாக இருக்கும் ஒசியாச் ஏரியில், இரண்டாம் உலகப் போரின்போது நாஜி படைகள் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தால் கொட்டப்பட்ட ஏராளமான வெடிமருந்துகளைக் கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல குண்டுகள் ஏரியில் விழுந்ததாகக் நம்பப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும், இரண்டு உலகப் போர்களில் இருந்து மீதமுள்ள 26 மெட்ரிக் டன் போர் ஆயுதங்களை ஆஸ்திரிய இராணுவம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.