17 இளம் பெண்கள்... திருமணம் செய்வதாக கூறி துஸ்பிரயோகம்: விமானி என ஏமாற்றியதும் அம்பலம்
இந்திய மாநிலம் கேரளாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி, நகை மற்றும் பணமும் பறித்த வழக்கில் குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த டிஜு ஜார்ஜ் தாமஸ் என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தலைமறைவாக இருத டிஜுவை, பொலிசார் சாமர்த்தியமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர்.
மனைவி இறந்து போனதாகவும், இரண்டாவது திருமணத்திற்கு முயன்று வருவதாகவும் கூறி திருச்சூர் பகுதி பெண் ஒருவரை இவர் சமீபித்துள்ளார்.
மட்டுமின்றி முக்கிய தனியார் விமான சேவை நிறுவனங்களில் தாம் விமானியாக பணியாற்றியுள்ளதாகவும், தற்போது கனடா நாட்டிற்கு குடியேறும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார்.
மேலும், விமானிகளுக்கான உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பெண் வீட்டாருக்கு அளித்துள்ளார். இந்த நிலையில் திருமணம் உறுதியானதும், பல காரணங்கள் கூறி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் வாங்கிச் சென்றதாக புகாரில் கூறப்படுகிறது.
இதனிடையே, பிறந்தநாள் விழா விருந்துக்கு என கூறி, தனியார் ரிசார்ட்டில் வரவழைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் புகாரில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை காருக்குள் வைத்து இயற்கைக்கு மாறான உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் திருச்சூர் பெண் பொலிசாரிடம் புகாராக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை விசாரித்த பொலிசாருக்கு, மலேசியாவிலும், துபாய் மாகாணத்திலும் டிஜுவுக்கு எதிராக இதேப்போன்ற வழக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை 17 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டது அம்பலமானது.
மேலும், மலேசியாவில் இருந்து இது தொடர்பான வழக்கில், நாட்டை விட்டு வெளியேற்றியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டிஜு தொடர்பில் விரிவான விசாரணை தேவை எனவும், பொலிஸ் காவலில் விசாரணை வேண்டும் என நீதிமன்றத்தில் கோரப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.