லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் மீது தாக்குதல் நடத்த முயற்சி: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி
லண்டனில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்த முயலும் காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S.ஜெய்ஷங்கர், பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
லண்டனில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சிலர், நிகழ்ச்சி நடக்கும் கட்டிடத்துக்கு வெளியே நின்று அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி முடிந்து ஜெய்ஷங்கர் காரில் ஏறச் செல்லும்போது, திடீரென ஒருவர் ஜெய்ஷங்கரின் காரை நோக்கி ஓடத்துவங்கியதுடன், இந்திய தேசியக் கொடியை அவர் கிழிக்கும் காட்சிகளும் சமூக ஊடகமான் எக்ஸில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🚨 : Khalistani goons attempt to heckle India’s External Affairs Minister @DrSJaishankar in London while he was leaving in a car. A man can be seen trying to run towards him, tearing the Indian national flag in front of cops. Police seem helpless, as if ordered to not act. pic.twitter.com/zSYrqDgBRx
— THE SQUADRON (@THE_SQUADR0N) March 5, 2025
விடயம் என்னவென்றால், அங்கு போதுமான பொலிசார் இல்லை. இருந்தவர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை.
சொல்லப்போனால், பொலிசார் பெரிதாக அலட்டிக்கொண்டதுபோல் தெரியவில்லை என்னும் ரீதியில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |