கொரோனா பரவிவிட்டதா? இல்லையா? இப்படியும் கண்டுபிடிக்கலாம்? வெளியான முக்கிய தகவல்
ஜேர்மனியில் செயல்படும் பிரபல நிறுவனம் ஒன்று, கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கொரோனா தொற்றைக் கண்டறியலாம் என்று தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவி வருகிறது. ஆனால், அந்த நோய் பரவிவிட்டது என்பதைக் கண்டறிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் படி ஜேரம்னியில் யல்படும் ஆப் டெவலப்பிங் நிறுவனம் ஒன்று கண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்றைக் கண்டறியலாம் என்று தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முனிச் நகரில் செயல்படும் நிறுவனம் ஒன்று பரிசோதனை செய்து வருகிறது.
தாங்கள் கண்டறிதுள்ள செயலிக்கு Semic EyeScan என்று பெயரிட்டுள்ளனர். ஸ்மார்ட் போன் மூலம் கண்களைப் படம் எடுத்து இந்த செயலிக்கு அனுப்பினால் கண்ணில் உள்ள இளஞ்சிவப்பு அழற்சி அறிகுறி, மூலம் கொரோனா தொற்றை உறுதி செய்து அது கூறுகிறது.
கண்களின் விழிப்படலத்தில் ஏற்படும் லட்சக்கணக்கான இளஞ்சிவப்புகளில் கொரோனாவினால் ஏற்படும் இளஞ்சிவப்பை தனிமைப்படுத்திக் கண்டறிந்து தொற்றை உறுதி செய்ய தங்களால் முடிந்ததாக நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Germanyஇந்த செயலியின் முடிவுகள், 95 சதவீதம் சரியாக உள்ளதாகவும், 3 நிமிடத்தில் கொரோனா தொற்றைக் கண்டறிய முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.